Monday, November 3, 2014

ஓர் தலைவன் உருவாகிறான் !

வெற்றிடம் நிரப்ப வந்தவன்
      நான் அல்ல!
வெற்றிடம் விட்டு செல்ல
     வந்தவன் நான் !
வீழ்ச்சியால் மிரட்சி
     காண்பவன் நான் அல்ல!
புரட்சியால் எழுச்சி
     காண்பவன் நான் !

சாதிகள் தொலைத்து ,
மதங்கள் மறந்து ,
பகுத்தறிவு புகுத்தி ,
மனிதம் வளர்க்க
வந்தவன் நான் !

பணத்தால் இனத்தால்
எம் மக்களிடம் விதைக்கப்பட்ட
அடிமை தனத்தை வேறோடு
அழித்து ஆக்க சிந்தனையை
விதைக்க வந்தவன் நான் !

ஓர் தலைவனாய் உங்களை
ஆள வந்தவன் நான் அல்ல !
உங்கள் தோழனாய் உங்களுடன்
வாழ வந்தவன் நான் !

இது போன்ற ஆயிரம்
சிந்தனைகள் தேவை
நான் ஒரு முழு தலைவனாய்
ஆவதற்கு அவற்றிக்காக
காத்திருக்கிறேன் நாளைய
                         தலைவனாய் !
   
     

No comments: