Wednesday, March 25, 2009

வேலனுக்கு ஓர் விளக்கம்

விதைக்க மறந்த விவசாயி
விளைச்சலைத் தேடுகிறான்

தாயை மறந்த தனையன்
கடவுளைத் தேடுகிறான்

மனிதத்தை மறந்த மனிதன்
புனிதனைத் தேடுகிறான்

கொள்கையை மறந்த தலைவன்
நாற்காலியைத் தேடுகிறான்

தோல்வியை மறந்த வீரன்
வெற்றியைத் தேடுகிறான்

காதலிக்க மறந்த கணவன்
பெண்மையைத் தேடுகிறான்

லீலாவை மறந்த வேலன்
மாலாவைத் தேடுகிறான்


இத்தனை வரிகள் எழுதிய பின்
விடையைத் தேடுகிறேன்

மறந்து போனவையே தேடுகின்றனவற்றின்
சாவியாகும்

இங்கு வேலனுக்கு ஓர் விளக்கம்
லீலாவின் தங்கை தான் மாலா.