Thursday, December 6, 2012

மண நாள்



நாளை பகலவன் எனக்காய் உதிக்கட்டும் !
நாளை நிலாவும் எனக்காய்  தோன்றட்டும் !
நாளை  தேசம் எனக்காய் இயங்கட்டும்!
நாளை  இணையும் சொந்தங்கள்
என்றுமே என்னோடு நிலைக்கட்டும் !


எங்கோ  பூத்த  மலர்கள் மண மாழைகளாக !
யாரோ செய்த நகைகள் மண ஆபர்ணங்க்களாக !
என்றோ நெய்த பட்டாடைகள் மண ஆடைகளாக !
என்றுமே இணைந்த என்  நண்பர்களின்
நெஞ்சங்கள் வாழுத்துக்கள்  பாட !

எனக்காய் பிறந்தவளை என் உயிருடன்
இணைக்க  மணமேடை ஏறுகிறேன் !

 உங்கள்  வாழ்த்துகளுடன் !
ராஜா 

Sunday, November 11, 2012

தீபாவளி

தீபங்களின்  விழா  என்பர் !

மெய்ஞானத்தில் எனது பெயர் -பிரகாஷம் .

விஞ்ஞானத்தில்  எனது  வேகம் 3 லட்ச கீ.மீக்கள் .

மெய்ஞானமும் விஞ்ஞானமும் கலந்த

மனிதத்தில் எனது வடிவம் மகிழ்ச்சி !



விஞ்ஞானம் தந்த வேகத்துடன்

மெய்ஞானம்  தரும் பிரகாசத்தை

உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும்

விதைத்து மகிழ்ச்சியை பரப்பிட

இதோ விரைகிறேன்!
 
இப்படிக்கு ,
தீபாவளி !

Friday, August 24, 2012

ஆகஸ்ட் 15

இந்நாளில் ஆண்டுதோறும் 
ஏற்றபடுகிறேன் விண்ணில் !
அதை கொண்டாட மிட்டாய் 
கொடுக்கின்றனர் மண்ணில்!

இப்போதெல்லாம் சுதந்திர தினம் 
வெறும் மிட்டாய் தினங்களாக மாறிப் போனது!
மாறிப் போனவை தினங்கள் மட்டுமல்ல!
என்னை ஏற்றும் கரங்களும் தான்!

ஊழல்  என்பது குற்றமென்பது 
மாறி அவை தங்களின் அடையாளம்
என மார்தட்டி கொள்ளும் அரசியல்வாதிகளும் ,
அவர்களின் கைப்பாவைகளாக 
மாறிப் போன அதிகாரிகளும் ,
போலி தலைவர்கள்  மட்டுமல்ல ,
போலி இந்தியர்கள் மட்டுமல்ல 
போலி மனிதர்களும் கூட! 

இவர்களின் கரங்களால் ஏற்றப்படும் 
போதெல்லாம் காயப்படுகிறேன்!
நல்ல வேளை நான் 
உணர்வுகள் மட்டும் வாய்க்கப்பெற்றேன்!
உயிரும் இருந்திருந்தால் என்றோ 
அறுத்திருப்பேன் இவர்களின் கரங்களை 
நான் வசிக்கும் கயிற்றினால்!

இருப்பினும் விண்ணில் 
பறக்கிறேன் என் மண்ணில் 
வாழும் மைந்தர்களை காணும் ஆசையுடன் !
ஆனால் நான் காண்பதோ!

அன்றாடம் சோற்றுக்கு திண்டாடும்
ஒரு கூட்டம் !
குற்றவாளி என்ற பின்பும் ஜாமீனில் 
வெளிவந்தால் அதையும் கொண்டாடும்
ஒரு கூட்டம்!

நாங்களும் மனிதர்கள் தான்
உங்களிடம் மனிதம் இருந்திருந்தால் 
என்று கூறும் ஒரு கூட்டம்!
மனிதம் என்ன விலை என கேட்டு 
தம்மையே மறந்த 
பணமுதலைகள் ஒரு கூட்டம்!

மீண்டும் கூறுகிறேன் எனக்கு 
உயிரில்லை.இருந்திருந்தால் ,
கண்ணீர் மழை பொழிந்திருப்பேன் 
நான் ஏற்றப்பட்ட இடங்களிலெல்லாம் 
இக்காட்சிகளை காண்பதால்!

எனினும் காத்திருக்கிறேன் 
அடுத்த கொடியேற்றத்திற்காக !
நல்ல கரங்களை எதிர்பார்த்து மட்டுமல்ல!
நல்ல காட்சிகளையும் எதிர்பார்த்து!

இப்படிக்கு,
உணர்வுகளுடன் !
தேசிய கொடி

Sunday, August 5, 2012

நண்பர்களின்றி நான்!


 கோடைகால நீரோடை ,
 இலையுதிர்கால கிளைமரம்,
 ஜனங்களற்ற திரையரங்கம்,
 குளிர்வற்ற  நீர்மேகம்,
 வாசமில்லா வாடியமலர் ,
 மொத்தத்தில் நான் உணர்வுகளற்ற நரம்புகள்!
 உதிரங்களாக என் நண்பர்கள் 
என்னுடன் இல்லாவிடில்!

Monday, May 28, 2012

எதிர்ச்சொல்


கொலை
கொள்ளை
வன்முறை
தீண்டாமை
இனவெறி
கற்பழிப்பு.

மேற்கண்ட சொற்களுக்கு
எதிர்ச்சொல் தேடினேன்
விடை வந்தது
மனிதம் என்றும்!
அன்பு என்றும் !

என்றும் அன்புடன்,
மனிதன்.

Friday, May 4, 2012

ஒரு புலியின் காதல்!





நன்னீராய் இருந்த என் மனதில்
வானவில்லாய் கலந்து
வண்ண மயமாய் மாற்றி விட்டாய் !

செந்நீர் சிந்தும் போர்களத்தில்
தமிழ் வேள்விக்காக
என் உறவுகள் தொலைத்து
கண்ணீர் தாங்கிய கன்னத்தை
உன் ஒற்றை விரலால் துடைக்கும்
பரிசத்தில் உணர்த்தினாய் என் புதிய உறவை!

இசை ஓர் அந்நிய மொழி என்பேன்
அதையே என் வாய் மொழி ஆக்கினாய்!
ஓவியம் என் காகிதங்களில்
உள்ள கிறுக்கல்கள் என்பேன் .
அவற்றை உன் உருவங்கலாக்கி
என்னை அதன் ரசிகனாக்கினாய்!
கவிதை காதலிப்பவனின் புலம்பல் என்பேன் ,
என்னையும் கவியாக்கி
என் புலம்பல்களை கவிதையாக்கினாய்!

போரின் தாக்கத்தால் தகர்ந்து போன
என் தன்னம்பிக்கையை
மீண்டும் என் மனதில் தாரைவார்த்து
என்னை சந்தோஷ வானில் பறக்க செய்தாய் !
 
மகிழ்ச்சியாய் இருக்கும்
ஒவ்வொரு நாளும்
உன் ஆயுளின் கூடுதல் நாளே என்று
என் வாழ்வில் மூன்று வருடங்களை கூடிவிட்டாய் !

கடவுள் ஒன்றும் முட்டாள் அல்ல
உன்னை நிரந்தரமாக்கி
என்னை முடிவிலியாக்க!

தாய் மொழி பேசிய
ஒரே காரணத்திற்காக
வாடிய மலர்களில் ஒன்று நீ!
பதுங்கிய புலிகளில் ஒன்று நான்!

விரைவில் பாய தயாராகிறேன்
நான் உன் மீது கொண்ட காதலுக்காக
மட்டும் அல்ல நாம் நம் மண் மீது
கொண்ட காதலுக்காகவும்!

என்றும் வேட்கையுடன் !
ராஜா.....