Monday, November 3, 2014

ஓர் தலைவன் உருவாகிறான் !

வெற்றிடம் நிரப்ப வந்தவன்
      நான் அல்ல!
வெற்றிடம் விட்டு செல்ல
     வந்தவன் நான் !
வீழ்ச்சியால் மிரட்சி
     காண்பவன் நான் அல்ல!
புரட்சியால் எழுச்சி
     காண்பவன் நான் !

சாதிகள் தொலைத்து ,
மதங்கள் மறந்து ,
பகுத்தறிவு புகுத்தி ,
மனிதம் வளர்க்க
வந்தவன் நான் !

பணத்தால் இனத்தால்
எம் மக்களிடம் விதைக்கப்பட்ட
அடிமை தனத்தை வேறோடு
அழித்து ஆக்க சிந்தனையை
விதைக்க வந்தவன் நான் !

ஓர் தலைவனாய் உங்களை
ஆள வந்தவன் நான் அல்ல !
உங்கள் தோழனாய் உங்களுடன்
வாழ வந்தவன் நான் !

இது போன்ற ஆயிரம்
சிந்தனைகள் தேவை
நான் ஒரு முழு தலைவனாய்
ஆவதற்கு அவற்றிக்காக
காத்திருக்கிறேன் நாளைய
                         தலைவனாய் !
   
     

Friday, August 15, 2014

இசையுடன் வாழ்கிறேன்!


ஆனந்தம்  எதுவென்று அறியா 
அகவையிலே  அன்னையின் வாய்மொழி 
 வழியே உனைக்  கேட்டு அமைகிறேன் 
என் அழுகையிலிருந்து!

இயற்கை ஒழித்து வைத்த 
உன்னை  உயிர்பித்து 
உணர்கிறோம் உயிர்மொழியாய்!

என் ஆனந்தத்தில் ஆர்பரித்தாய் 
என் அமைதியில் பூப்பொழிந்தாய் 
என் துக்கத்தில் என் துணை நின்றாய் 
என் காதலில் என் உள்ளே நின்றாய் 
என் உணர்வுகளோடு கலந்து 
என் ஆன்மாவில் கரைந்து விட்டாய் 
என்றும் இசைவுடன் வாழ்கிறேன்!
                             நான் 
                            ராஜா !
                                                   

 

Tuesday, August 12, 2014

ஐம்பதில் ஓர் காதல் கடிதம்!

என்றோ வந்த கடிதத்திற்கு
இன்று பதில் எழுதுகிறேன்!

வென்றே தீர வேண்டிய இளைஞன் நீ!
நின்றே தீர்த்தாய் உன் நாட்களை
எனைக் காண்பதற்கென்றே!

காணும் போதெல்லாம்
கண்ணிமைத்தாய் என்
இதயம் கனிவதற்கே!
ஆனால் நீ அறியவில்லை
உன் போன்ற ஆண் மகனை
ஏற்பதற்கு எந்த பெண்ணின்
மனமும் ஒரு போதும்
தயங்குவதில்லை என்று!

நான் கடந்து வரும்
தோட்டத்தில் காணும்
பூக்கள் யாவும் வண்ணமயமாய் இருக்கும்,
ஆனால் நீ தரும் பூக்களில்
மட்டுமே வாசமும் இருக்கும்!

ஆங்காங்கே கவனித்த
கவிதைகள் யாவும்
வரிகளாய் குன்றின!
ஆனால் நீ தந்த கடிதங்கள்
மட்டும் கவிதைகளாய் பொங்கின!

தந்தை வாங்கி தந்த
வைரத் தோடும் மங்கிப் போனது!
நீ தந்த அந்த கண்ணாடி
வளையல்கள் மின்னும் மின்னல்களால்!

என்னை வர்ணிக்கும் போது கவிஞ்ன்னாய்
என்னை வரையும் போது ஓவியன்னாய்
எளியவனை மதிக்கும் போது மனிதன்னாய்
வலியவனை எதிர்க்கும் போது புரட்சியாளன்னாய்
அவலங்களை பேச்சால் மிதிக்கும் ஓர்
சிறந்த தலைவன்னாய்!

மொத்தத்தில் மாறிப் போனாய்
ஒரு பெண்ணை கொள்ளை கொள்ளும்
முழு ஆண் மகனாய்!
மெல்ல மெல்ல என் மனத்திலும்
மாறிவிட்டாய் என் காதலனாய்!

என் தோழிகளிடமும் சொல்லிவிட்டேன்,
நீ வீழ்ச்சி இல்லா வீரமகன் என்று!
ஆனால் உன் தேர்வு முடிவுகள்
காட்டிவிட்டது  நீ அந்த வருடம்
தேர்ச்சி இல்லை என்று!

அதிர்ச்சி தந்தது உன் தோல்வி,
காரணம் காதல் கடிவாளம் என்று,
வேதனை உள்ளத்துடன் உன்
காதலில் இருந்து விலகி நின்றேன்,
உன் வெற்றி இவ்வுலகிற்கு
கட்டாயம் தேவை என்று!

உன் வெற்றிகளில் என்
தோல்வியைத் தொலைத்தேன்!
உன் சாதனைகளில் என்
வேதனைகள் மறந்தேன்!

இன்று ஒரு தேசத்தின் தலைவன் நீ,
அன்று உன்னோடு இணைந்திருந்தால்
என் பெயரும் பத்திரிக்கைகளில் இடம் பெறக்கூடும்!
ஆனால் இன்று நிச்சயமாய் சொல்கிறேன்
அது உன் இதயத்தில் உள்ளதென்று!
                        இப்படிக்கு!
                        உன் இதயம் வாழ்
                        காதலி!   
                        


  


Monday, February 17, 2014

என் இனிய நண்பனுக்கு!


வேற்று கிரகத்து
நண்பர்கள் நாம்!
ஒளி  ஆண்டுகளாய் நாம்
தொடர்ந்த பயணத்தில்
சற்றென்று  முடிவு கொண்டோம்
பூமிக்குச் சுற்றுலா செல்வதென்று!

எனக்கு சற்று முன்பு
புறப்பட்டு இந்த பூமியில்
அவதரித்தாய் ஓர்
ஆண் மகனாய் !
இன்று நினைவு கொள்கிறேன் !
நீ என்னிடம் விடைபெற்ற
                         நாளையும் !
இங்கு அவதரித்த நாளையும்!
நண்பனே இனிய பிறந்த நாள்
                        வாழ்த்துக்கள்!

சற்றே  தாமதித்தாலும் ,
என்னையும் பூமிக்கு
வரவழைத்தாய் உன் மூலமே !
ஆம் நான் இங்கு வந்த
நாள் முதல் இப்பூமியில்
உனது பெயர் தந்தை!
தந்தையே இனிய பிறந்தநாள்
             நல்  வாழ்த்துக்கள்!

என்னை விட சற்று முன்
தோன்றி இப்பூமியில் நீ
கற்று தேர்ந்தவை ஏராளம்!
அவற்றை எமக்கு கற்றுத் தர
நீ நலமுடன் இங்கு வாழ
வேண்டும் பல நெடுங்காலம்!

                           என்றும் உன்னுடன்
                           பயணிக்கும்,
                           ராஜா