Friday, August 15, 2014

இசையுடன் வாழ்கிறேன்!


ஆனந்தம்  எதுவென்று அறியா 
அகவையிலே  அன்னையின் வாய்மொழி 
 வழியே உனைக்  கேட்டு அமைகிறேன் 
என் அழுகையிலிருந்து!

இயற்கை ஒழித்து வைத்த 
உன்னை  உயிர்பித்து 
உணர்கிறோம் உயிர்மொழியாய்!

என் ஆனந்தத்தில் ஆர்பரித்தாய் 
என் அமைதியில் பூப்பொழிந்தாய் 
என் துக்கத்தில் என் துணை நின்றாய் 
என் காதலில் என் உள்ளே நின்றாய் 
என் உணர்வுகளோடு கலந்து 
என் ஆன்மாவில் கரைந்து விட்டாய் 
என்றும் இசைவுடன் வாழ்கிறேன்!
                             நான் 
                            ராஜா !
                                                   

 

No comments: