Friday, January 2, 2015

2015-எனது வேண்டுதல்கள்

2015 - ஓர் போர்க்களம் !
   அன்பு என் ஆயுதம்
     ஆக வேண்டும் ,
   வெறுப்புகளை நான்
      வென்றிட வேண்டும்!

2015 - ஓர் ஆடுகளம் !
    வெற்றியை விட நான்
      வேகமாய் ஓட வேண்டும் ,
    தோல்வி என்னைக் கண்டு
      பயந்து ஒதுங்க வேண்டும்!

2015 - இலக்கியம் !
     என் வார்த்தைகள்
        வலுப் பெற வேண்டும் ,
     புதிய சிந்தனைகள்
         உருப் பெற வேண்டும் !

2015-ஆன்மீகம் !
     கடவுள் என்றும் என்
        துணை நிற்க வேண்டும் !
     என் கடமைகள் யாவைவும்
        நான் கடவுளாய் என்ன வேண்டும் !

2015- அரசியல் !
     என் தேசத்தில் ,
     சதியில்லா அரசியல்
     வளர வேண்டும் ,
     மற்றும் சதியை  வெல்லும்
     புரட்சியும் மலர வேண்டும் !


                                                    மேலும் வேண்டுதல்களுடன் !
                                                     ராஜா .


           
     

No comments: