துள்ளி திரிந்த கல்லூரி
கன்னிக்கு மௌனம்
கலைக்க நேரமின்றி
நடந்தேறியது இரு
வீட்டார் சந்திப்பு.
கன்னியின் மௌனம்
சம்மதம் என்று
சம்மந்தமும் இனிதே
உருவானது.
கல்யாண வைபவங்கள்
முடிந்து
மஞ்சம் வந்தபின் தான்
தன் மௌனம் கலைத்தாள்
கன்னி!
அன்று தான் பெற்றது
சம்மத மௌனம் அல்ல
கள்ள மௌனம் என்று
தன் ஏமாற்றத்தை
ஏக்க பார்வையில்
உணர்த்தினான்
கணவன்!
அன்று முதல்
ஏக்கத்தால், ஏமாற்றதால்
தாக்கம் கொள்ளாத கணவனும்!
மௌனத்தால்,
ஏமாற்றி விட்டோமே என்ற
குற்றதால் தாக்கப்பட்ட மனைவியும்!
பரிமாரிக் கொண்ட
மௌனங்கள் தான்
கள்ள மௌனங்கள்!
அந்த கள்ள மௌனங்கள்
தந்ததுதான் இன்றளவும்
இனிக்கும் காதல் கீதங்கள்!
அந்த கீதங்களால் தோன்றிய
ஓர் ராகம்!
அதுவே நாம் கண்டு
களித்த ரசித்த
மௌன ராகம்!
இராஜா.