சத்தமில்லா
யுத்தமொன்றில்
வெற்றி கொண்டு
கோட்டை கொண்டேன்.
வெற்றிக் களிப்பில்
உணர்ந்தேன் சற்றே
எகிறியிருந்த
இதயத்துடிப்பை.
ரத்தம் சிந்தா
யுத்தமென்றாலும்,
சுற்றிலும் உணர்கிறேன்,
ரத்தமும் சதையுமாய்.
கைகள் வருமோ?
கால்கள் வருமோ?
தேகம்தான் வலு பெறுமோ?
என்ற வினாக்களுக்கு
விடை தர ஆளில்லை.
தனிமையே
என் தனிப்பெருந்துணை
என்றுணர்ந்து
காலம் கடந்தோடியது.
அப்பெரும் நிகழ்வும்
நடந்தேறியது.
பச்ச உடம்புக்காரி
இப்பச்சிளம் பிள்ளையை
அள்ளி மாரோடு அணைக்கையில்
உணர்ந்தேன் நான்
முன்பு உணர்ந்தது
தனிப்பெருந்துணை அல்ல
தான்தோன்றித்தனமென்று!