Wednesday, November 4, 2015

என் இளைய இந்தியாவிற்கு!

அரசியலில் காழ்ப்புணர்ச்சி,
  கவலை கொள்ள வேண்டாம்!
கடல் கடந்த கருப்பு பணம்,
  கண்டு கொள்ள வேண்டாம்!
ஊழல்களின் புதிய அவதாரங்கள்,
  உருகுலைய வேண்டாம்!
வறுமையின் நீட்சி
  வருத்தம் கொள்ள வேண்டாம் !

உடையா உறுதியோடும்,
ஒடுங்கா ஒற்றுமையோடும் ,
ஒப்பில்லா உழைப்போடும்,
உதிரா உண்மையோடும்,
நல்லதோர் தேசம் படைத்து,
காலத்தை வெல்ல விரைந்திடுவோம் வா!

இவ்வுலகம்  எத்தனையோ
   சீற்றங்களை கண்டுள்ளது!
இயற்கையின் தாயான ,
இளைஞர்களின் கூடாரமான,
இந்தியாவின் சீற்றத்தையும் காணட்டும்.

இணைந்தே செயல்படுவோம்
இமயத்தின் உச்சியை தொட்டிடுவோம்!

                                    என்றும் பற்றுடன்,
                                      இந்தியன்.

No comments: