Saturday, February 7, 2015

ஓர் மாய- ஆவி மகனாகிறான் !

மாயங்கள் செய்தேன்
நீ மடியவில்லை!
காயங்கள் செய்தேன்
நீ கனியவில்லை !
உன் கனவுகளை
ஆக்கிரமித்தேன் நீ
என்னை கண்டுகொள்ளவில்லை !

பெண்ணே!
ஏன் என்னை உணர மறுக்கிறாய் !
மாறாக என்னை மறுக்க நினைக்கிறாய் !
மந்திரங்களால் மறைக்க நினைக்கிறாய் !
பூஜைகளால் புதைக்க நினைக்கிறாய் !

இரு நூறு ஆண்டுகளுக்கு முன்
உத்தேசித்தேன் உன்னுடன் தான்
வாழ வேண்டும் என்று !

காலம் கணித்து இப்பூமியில் ஜனித்தேன் !
உன் ஜனனம் விரைவில் வருமென்று !
நாம் இருவரும் இணைந்து நம்
காதலில் களிப்போம் என்று !

காலன் செய்த தவறோ !
பிரம்மன் உன் மீது கொண்ட காதலோ !
உன்னை இப்பூமிக்கு அனுப்ப
மறந்து போயினர் !
நம் இருவரின் காதலை இந்த
அகிலத்தில் இருந்து அகற்றி விட்டனர் !

உயிரோடும் உணர்வோடும்
ஒரு நூறு ஆண்டுகள்
காத்திருந்தேன் உனக்காக !
காலங்கள் கடந்து போயின !
என் தேகமும் துவண்டு போயிற்று !

துவண்ட தேகத்தை தொலைத்து விட்டேன் !
ஆசை கொண்ட ஆன்மாவை காத்து வைத்தேன் !
உன்னை சந்திக்க ஆவியும்
ஒரு  வழி என்று !

இருபது ஆண்டுகளுக்கு பின்!

காலம் தன் தவறை உணர்ந்ததோ,
பிரம்மன் உன்மீது கொண்ட காதல் தகர்ந்ததோ !
உன்னை அனுப்பி வைத்தனர்
                         இந்த பூமிக்கு !

உன் முதல் சுவாசக்காற்று
தந்த பரிசத்தால் துளிர்த்தேன் !
என் ஆயுளில் நான் செய்த
புண்ணியங்கள் யாவையும் உனக்கு
                                    அர்பணித்தேன் !
உனக்கு என்றும் குன்றா அதிஷ்டத்தைப்
                                    பரிசளித்தேன் !

உன் இருபது வயது வரை
உன்னை தொடர்ந்தேன் நிழலாய் !
உன்னை காத்தேன் கடவுளாய் !
உன் வாழ்வை உயர்த்தினேன் ஏணியாய் !

இருபதை கடந்து விட்டாய் ,
நீ என்னை உணர மறந்து விட்டாய் !
என்னை உனக்கு உணர்ந்த முயன்றேன் !
                            மாயங்களாய் !
                            காயங்களாய் !
                            கனவுகளாய் !

ஆனால் நீயோ என்னை  உணர மறுத்து 
உன்னை தொடரும் பேய் என்கிறாய் !
உன்னை படுத்தும் பிசாசு என்கிறாய் !
உனக்காக தேகம் துறந்தவனை ,
உருவம் அற்றவனை உணர மறுக்கிறாய் !

உணர்வுகளால் பிணைந்த நம் உறவு ,
காலத்தால் பிரிந்து விட கூடாது.
காதல் கடந்து உன் அன்பைப்
பெறுவது இனி இயலாது !
அதனால் முடிவு கொண்டேன்
உன் மகனாய் பிறந்து
உன் அன்பைப்    பெறுவதென்று  !

விரைவில் ஒருவனை மணந்து கொள் ,
உன் கருவறை நிரப்பத் தயாராகிறேன் !

                                               இப்படிக்கு ,
                                               மாய-ஆவி .



                         
                                                                  




No comments: