Saturday, November 26, 2011

கடைகோடி குடிமகனாய்!

எதுவும் மாறவில்லை !
இந்த நாட்டில் கடந்த
பத்தாண்டுகளில் எதுவும் மாறவில்லை !

இந்தியாவின் பொருளாதார
வளர்ச்சி பற்றி வரும்
செய்திகளில் உள்ள
எழுத்துக்கள் யாவும் எனக்கு
கிறுக்கல்களே !

சென்னையின் வீட்டு வாடகை
அதிகரிப்பும் ,
பெங்களூர் பெண்கள் அணியும்
ஆடைகளின் அளவு சுருக்கமும் ,
மும்பை மக்கள் இடநெருக்கடி
தேவை அதிகரிப்பும் ,
டெல்லியின் இந்திராகாந்தி
விமானநிலைய விரிவாக்கமும் ,
எல்லா ஊர்களின் IPL அணிகளின்
லாப அதிகரிப்பும் ,
எதையும் மாற்றவில்லை
நாட்டின் கடைகோடியில் வாழும்
இந்த தமிழனின் வாழ்க்கையில் !

எனது வேகமும் குறையவில்லை !
தேகமும் மாறவில்லை!
நான் சிந்தும் வியர்வைவும்
குறையவில்லை!
உண்ணும் உணவும்
அதிகரிக்கவில்லை!

மாற்றங்களே இல்லா வாழ்க்கை
வாழ ஒரு சிலரே
தகுதி கொள்கையில்
அத்தகுதியை எனக்கு அளித்தமைக்காக
கடவுளின் புகழ்பாடும் இவ்வேளையில்
உணர்கிறேன் ஓர் இனிய
மாற்றத்தை!

நாளையோ எனது 35வது தீபாவளி
எனது வாழ்வில் 25வது தீபாவளியோடு
ஓர் சிறிய ஒப்பீடு !

அன்றும் இன்று போல்தான்
ஓய்வில்லாமல் உழைக்கிறேன்
சிந்தும் வியர்வையில் மாற்றமில்லை
உடலின் திறனிலும் மாற்றமில்லை
ஆனால் மனதின் திட்டத்தில்தான்
ஓர் சிறிய மாற்றம் !

அன்றைய உழைப்பு முழுதும்
மறுநாள் மதுவிற்காக !
இன்றைய உழைப்போ என்
மகளின் புத்தாடைக்காக !

நாளை இப்புத்தாடையால் அவளின்
முகம் மலர என் அகம் குளிர
ஒப்புக் கொள்கிறேன்
என் வாழ்வின் பெருமாற்றத்தை....
இனிய மாற்றம் தான்!

---------------------------ராஜா

No comments: