Sunday, June 12, 2011

பிறந்த நாள்!

வித்திட்ட தந்தைக்கும்
விளைவித்த அன்னைக்கும்
பேர் உவகை தந்த நாள்.

ஆணோ ,பெண்ணோ
கருப்போ ,சிவப்போ
அங்கமெல்லாம் அமைப்பாய்
பிறக்க வேண்டும் என்ற
வேண்டுதலுக்கும் ,விரதத்திற்கும்
வரமாய் வந்த நாள்.

அது வரை அவர்களுக்கு
பரந்திருந்த உலகம்
முதல் முறை ஓர் குழந்தையாய்
சுருங்கிய நாள்.

இன்று வரை அவர்களுக்கு
விரிவடையா அவ்வுலகில்
நான் பெற்ற வெற்றிகளை
மட்டும் எனக்கு வெளிச்சமிட்டு காட்டி
தோல்விகளை இன்னும் தோளில்
சுமக்கும் என் பெற்றோருக்கு
இந்நாளை மட்டும் அல்ல
என் வாழ்வையே சமர்பிக்கிறேன்.

No comments: