Sunday, May 1, 2011

தந்தையாய் சிந்திக்கையில்!

உனது முத்தங்களின் எண்ணிக்கையில்
அறிந்தேன் உனது வயதின் வருடங்களை.

உனது அணைப்பின் இறுக்கத்தில்
உள்ள வலியில் உணர்ந்தேன்
நம் பிரிவின் வலியை.

ஆயிரம் தேசம் போய் வந்தேன்
எங்கேனும் காணவில்லை
உன் முகத்தில் காணும்
பரவசத்தை.

நூறு மொழியேனும் கேட்டிருப்பேன்
எவையேனும் மிஞ்சவில்லை
உன் மழலை மொழியை.

ஓர் விளையாட்டு வீரன் நான்
வெற்றிகளே எனக்கு சுகம் தரும்.
முதல் முறை மகிழ்கிறேன்
மகளே உன்னிடம்
நான் தோற்க்கையில்.

2 comments:

MahiShree said...

unmayileye romba arthamulla kavidhai...keep writing...!!!good work

RajaDurai Murugan said...

Thanks Dhanalakshmi..