முந்தி பிறந்ததால் நீ அக்கா.
பிந்தி பிறப்பதால் அவள் தங்கை.
மார்கழியில் பூசொரிந்தாய்
தையில் பொங்கல் தந்தேன்
சித்திரையில் சினம் கொண்டு சுட்டெரித்தாய்
கார்த்திகையில் சொட்ட நனைந்து சுகம் தந்தாய்
உன்னை சந்தித்த நாள் முதல்
உன்னோடு நானிருந்தேன் என்னோடு நீயிருந்தாய்
சுகமும் தந்தாய். சோகமும் தந்தாய்
காதலும் தந்தாய் மோதலும் தந்தாய்
எனினும் ஓர் விநாடியேனும்
நமக்குள் பிரிவில்லை
உன்னிடம் எனக்கு கோபமும் இல்லை
பின்பு ஏன் என்னை விட்டு பிரிகிறாய்
நொடி பொழுதில் ?
வினாவிற்கு விடை அளிக்கிறாய்
காதோரத்தில் .
என் தங்கை வருகிறாள்
உனை கவனிக்க
என்னை விட வேகமானவள்
சமாளிக்க தயாராய் இரு
உனக்கும் ஓர் வயது கூடி இருக்குமென்று .
உன் தங்கை பெயர்? என்றேன்
என்னுடன் ஒன்றை கூட்டி விடு
2011 என்றாய்.
1 comment:
SEMA...SEMA...
Post a Comment