Wednesday, July 8, 2009

அன்புள்ள மனிதனுக்கு .......

சிந்திக்க மறந்த எங்களை
தண்டித்து வரும் உங்களை
தண்டிக்க மிருக வதைச் சட்டம்
செய்ததற்கு நன்றி !

கூரிய நகங்களும் ,கொடூர பற்களுமே
எங்களின் கொடிய ஆயுதங்கள் .
அவற்றையும் நீ மழுங்கடித்த போது
நினைத்தோம் மனிதன் வீரனாக
வாழத் தொடங்கிவிட்டான் என்று !

ஆனால் இன்றோ ,
உன்னையும் சாம்பலாக்கி
எங்களையும் சாம்பலாக்கி
நம் சந்ததிகளையும் சாம்பலாக்கும்
அணுகுண்டைத் தயாரித்து விட்டு
மார்தட்டுகிறாய் விஞ்ஞான
விந்தை என்று !
ஆனால் உண்மையில் நீ அழைகிறாய்
விஷத்தை வயிற்றில் கட்டிக் கொண்டு !

ஆடைகள் கட்டி கொண்டு
நாகரீகம் என்றாய் !
அந்த ஆடைகளை குறைத்து
மேடையில் வலம் வரும்
பூனை நடைகளை நவநாகரீகம் என்கிறாய் !
ஏனிந்த முரண்பாடு உனக்குள் !

முன்னேற்றம் முன்னேற்றம்
என்று முணங்குகிறாய்
எதுவரை என்பதை மட்டும் மறைக்கிறாய்
கேட்டால் முடிவிலி என்கிறாய்
பகுதியே சுழியாய் இருக்க
எதைத் தொகுக்க விரும்புகிறாய் ?

என்றும் அன்புடன் ,
காட்டு ராஜா ,

1 comment:

David said...

நண்பரே உங்க கவிதைல கடைசி ரெண்டு வரி தான் பிரமாதம் ........