Wednesday, May 13, 2009

என் உயிர் தந்தவளுக்கு .............

கரு விழி திறக்கும் முன்பே
கருவறையில் சுவாசம் தந்தாய்!

நான் என் இரு விழி திறந்த பின்
உன் பெரு வலி மறந்து சிரித்தாய்!

உறங்க மறுத்த என் விழிகளை
உன் பாடலால் உறங்க வைத்து
நான் ரசித்த முதல் பாடகி ஆனாய் !

மொழி அறியா மிருகம்
ஆகி இருப்பேன்
அம்மா எனும் விதை விதைத்து
என் நாவில் தாய் மொழியைப்
படர வைத்தாய் !

அத்தமிழ் மொழியில் உனக்கு அன்னையர் தின
வாழ்த்துகள் சொல்ல யோசித்தேன் .
ஓராயிரம் வரிகள் வந்து போனது என்னுள்

நானோ காத்திருக்கிறேன்
உனது பிறந்த நாளிற்காக!

No comments: